உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் அங்குரார்ப்பணம்

வவுனியா மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றம் இன்று. அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி ஆலய திருமண மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இம் மன்றம் உருவாக்கப்பட்டது.

இம் மன்றமானது சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலத்தை போசகராக கொண்டு நிர்வாக கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தலைவராக மா.கதிர்காமராஜாவும் செயலாளராக செ.சபாநாதனும் பொருளாளர்ராக கோ. ஸ்ரீஸ்காந்தராஜாவும் உப.தலைவராக செ.சந்திரகுமாரும் உப.செயலாளர்மாணிக்கம் ஜெகனும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ரி. கே. இராஜலிங்கம், க.கிருபாகரன், அ.சூரியகுமார், ந.கபில்நாத்., சு்ஜெயச்சந்திரன், தி செல்வநாதன், வீ ஜெகசோதிநாதன், சி வரதராஜ்னும் கணக்காய்வாளராக ஓய்வுநிலை கிராம சேவையாளர் செல்வராஜாவும் நியமிக்கப்பட்டனர்.

இதன்போது பல சமுக ஆர்வலர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்து தெரிவிக்க