உள்நாட்டு செய்திகள்புதியவை

மினி சூறாவளியால் ஒருவர் காயம், வீடுகள் சேதம்

புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக ஒருவர் காயமடைந்த நிலையில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பாரிய மரங்களும் முறிந்துள்ளன.

இதன் காரணமாக பிரதேசத்தில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டத்தின் ஆண்டிகம- புத்தியாகம பகுதியிலேயே இன்று (சனிக்கிழமை) அதிகாலை இவ்வாறு மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.

இதனால் 26க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

 

கருத்து தெரிவிக்க