உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும்’

பெண்கள் குழந்தைகளின் கௌரவத்தை காப்பாற்றக்கூடிய ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் மகளிர் பிரிவின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பெண்களிற்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளனபொது போக்குவரத்துக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு காணப்படுகின்றது .

இந்த நிலையை மாற்றி ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுவர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்

கருத்து தெரிவிக்க