உள்நாட்டு செய்திகள்புதியவை

தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பதிவு

ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தந்தை மகனுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த நபரின் மகனின் திருமணம் ஒரு மாதத்திற்கு முன்னரே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சில தினங்களாக மகனின் திருமண மோதிரம் காணாமல் போயுள்ள நிலையில், பல இடங்களில் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் உயிரிழந்த தந்தை குறித்த மோதிரத்தை அடகு வைத்தமை தெரியவந்துள்ளது. இதன் பொது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகாப்பக மாறிய நிலையில் தந்தையை பலமாக தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான மகனை பல்லம காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க