உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கையின் ஆளில்லா படகு தமிழ்நாட்டில்; விசாரணை ஆரம்பம்

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அருகே உள்ள மணாலி தீவில் இலங்கை பதிவு எண்ணைத் தாங்கிய ஆளில்லா மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுங்க, காவல்துறை மற்றும் மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் குறித்த படகு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கப் பணியாளர்களால் இந்த படகு மண்டபம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது, குறித்த படகின் உரிமையாளரை அடையாளம் காணும் முயற்சிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த படகு செலுத்தி வந்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க