உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாதியின் சடலம் புதைப்பு;செப் 2 ஹர்த்தால்

மட்டக்களப்பு- கல்வியங்காடு இந்து மயானத்தில், புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் சடலத்தை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்து, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர் அமைப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஓர் இனத்தினரதும் மதத்தினரதும் மனங்களை காயம்படுத்தும் விதமாக மட்டக்களப்பு- கல்வியங்காடு இந்து மயானத்தில் பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்டமையை ஏற்க முடியாதெனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதியின் உடலை, குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிடின் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுமெனவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் குறித்த பயங்கரவாதியின் உடல் இரகசியமாக புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க