உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

100 அடி பள்ளத்தில் பாரவூர்தி குடை சாய்ந்தது

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட புஸல்லாவ காச்சாமலை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியது.

மணல் கொண்டு சென்றே பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்து வீடன் எனும் பகுதியில் நில வெடிப்பு ஏற்பட்டிருந்ததால் விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செல்வமதன் தம்ரோ நிறுவனத்துடன் இணைந்து பாதையை அகலப்படுதியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லையெனவும் விபத்துக்குள்ளான பாரவூர்தியை மீட்டெடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க