உள்நாட்டு செய்திகள்புதியவை

வெல்லாவெளியில் 740 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் இவ்வாண்டு 740 மில்லியன் 172 அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஆராயும் வெல்லாவெளி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இன்று வெல்லாவெளி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

கம்பெரலியஇ பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப் படுத்தபபட்ட நிதிஇமீள்குடியேற்ற அமைச்சுஇ மாகாண சபை ஒதுக்கீடுஇ கிராம சக்தி உட்பட பல திட்டங்களினூடாக இவ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறித்த அபிவிருத்தி பணிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.இராகுலநாயகி பட்டிருப்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி உட்பட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க