உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பருத்துறை துறைமுகத்தை பயன்படுத்த பயிற்சி வழங்க வேண்டும்

பருத்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்த பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோாிக்கை முன்வைத்துள்ளாா்.

பருத்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், இந்த துறைமுக அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்ட காலத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன.

இன்று இந்த துறைமுகம் எந்த குழப்பமும் இல்லாது மக்களுடைய விருப்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படுவதை மகிழ்ச்சி அளிக்கிறது . குழப்பங்களை தீா்த்துவைத்த ஆளுநருக்கும் நான் இந்த இடத்தில் நன்றி கூறுகிறேன்.

சுமாா் 175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. முதல்கட்டமாக 80 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது.

மிக பெருமளவு முதலீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் எமது பருத்துறை மக்களுக்கு, மீனவா்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக அமையும்.

சாித்திர காலம் தொடக்கம் இந்த துறைமுகம் ஒரு வியாபார துறைமுகமாக இருந்துவந்துள்ளது. இங்கே சுங்க அலுவலகங் கள் இயங்கிக கட்டிடங்களை இப்போதும் காணலாம்.

எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எமது மீனவா்கள் அனுபவிக்கவேண்டும்.

எமது மீனவா்களுக்கு பாாிய படகுகள், மற்றும் பயிற்சிகளை வழங்க முன்வரவேண்டும். கடல்வளத்தை கொண்டு எங்கள் பொருளாதாரத்தை நாங்களே கட்டியெழுப்பவேண்டும் என்றாா்.

கருத்து தெரிவிக்க