உள்நாட்டு செய்திகள்புதியவை

அலுத்கமகேயின் ஊழல் வழக்கு அக்டோபர் 4 திகதிக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட இரு நபர்கள் மீதான ஊழல் வழக்கு அக்டோபர் 4 ஆம் திகதிக்கு விசேட உயர் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரனராஜா ஆகியோரின் முன் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதன் போது குறித்த வழக்கை விசாரணை செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தது.

இந்த விசாரணையின் போது நீதிபதி குழுவில் தலைமை தாங்கும் நீதிபதி ஆர்.குருசிங்க இன்று ஆஜராகவில்லை இந்நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க