உள்நாட்டு செய்திகள்புதியவை

2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

2 கிலோகிராம் மற்றும் 650 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள்உதயபுரம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக நேற்று கடற்படை தெரிவித்துள்ளது.

மன்னார் விசேட பணிக்குழு (எஸ்.டி.எஃப்) உதவியுடன் கடற்படை நடத்திய சோதனையின் போது,இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இரண்டு பொட்டலங்களில் இருந்த கஞ்சா போதைப்பொருள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் உதயபுரம் மற்றும் பேசாலை பகுதிகளில் வசிக்கும், 18, 26 மற்றும் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கஞ்சா பொதிகளுடன் மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க