உள்நாட்டு செய்திகள்புதியவை

மாளிகை அரசியலை புறக்கணிக்கிறேன், சஜித் முழக்கம்

பொதுமக்களின் வரிப்பணத்தில் வாழும் ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை, “நான் மாளிகை அரசியலை முற்றாக புறக்கணிக்கின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் 365 நாட்களும் நாள் ஒன்றின் 24 மணித்தியாலங்களும் மக்கள் சேவையில் ஈடுபட விரும்புகின்றேன்.

நாட்டிலுள்ள விவசாயிகளை பாதுகாத்து அவர்களின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை, எதிர்வரும் நவம்பர் மாதம் உருவாக போகும் புதிய அரசாங்கத்தின் ஊடாக வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் வரி பணத்தில் வாழும் அரசியல்வாதிகள், எந்தவொரு விடயங்களிலும் தீர்மானம் எடுக்கும்போது, மக்கள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க