விளையாட்டு செய்திகள்

தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடரில் டோனி இல்லை?

தென்ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்காமல் ஓரங்கட்ட தேர்வு குழுவினர் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட விக்கெட் கீப்பர் 38 வயதான டோனி, இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் டோனி தனது எதிர்காலம் குறித்து எதுவும் பேசாதுள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த தொடரில் ஆடிய வீரர்களை அப்படியே தொடர வைக்க தேர்வு குழுவினர் விரும்புவதாகவும், இதனால் தென்ஆப்பிரிக்க தொடரில் டோனிக்கு இடம் கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) இந்தியாவுக்கு வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இந்திய அணியில் டோனி இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி வருகிற 4-ந் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க