உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கடும் காற்றினால் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதால், நாளை (ஆகஸ்ட் 30) காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 31 இரவு 8 மணி வரை கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை தொடக்கம் ,மட்டக்களப்பு வரையிலும் கடல் காற்றின் வேகம்70 கிமீ – 80 கிமீ வேகத்தில் அதிகரிக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன,

அதே நேரத்தில் ஏற்கனவே கரையிலிருந்து வெளியேறிய படகுகள் கரைக்கு திரும்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க