உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புத்த பெருமானின் உருவம் பொறித்த ஆடையினால் பரபரப்பு

திருகோணமலை நகரில் இன்று பேரூந்து தரிப்பிடத்தில் புத்த பெருமான் உருவம் பொறித்த சேலை அனிந்திருந்த பெண்மணியினால் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட குறித்த பெண்மணி திருகோணமலை ஸ்ரீ விஷ்னு கோவிலுக்கு புத்த பெருமானாரின் உருவம் பொறித்த சேலை அணிந்து  வந்துள்ளார்.

குறித்த சேலை இந்தியாவில் வாங்கினதாகவும் புத்த பெருமானாரின் உருவம் பொறித்த சேலைக்கு தடைவிதித்திருப்பது சம்பந்தமாக தனக்கு தெரியாதென்று தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு விஜயம் செய்த சுமேதகம ஜெயசுராம ஆமதுருவோ திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் அப்பெண்மணியையும் அவருடன் இருந்த சிறுமி உட்பட ஒரு வயதான பெண்மணியையும் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதையடுத்து குறித்த பெண்மணியின் சேலையை மாற்றி வேறு சேலைஅணியச்சொன்னதாகவும் அதன் பின்பு அப்பெண்ணமணியை பொலிஸ் நிலையத்தில்
இருந்து விடுவித்ததாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க