விளையாட்டு செய்திகள்

அடுத்­த­டுத்து உலக கிண்ண போட்டிகளை நடத்த திட்டம்

2020, 2021 என இரு ஆண்­டு­க­ளிலும் அடுத்­த­டுத்து இரு­ப­துக்கு 20 உலக கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. அதன் பிறகு  அடுத்த ஆண்டு இந்­தி­யாவில் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தை நடத்த திட்­ட­மிடப்பட்­டுள்­ளது.

சம்­பியன்ஸ் கிண்­ணத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதற்கு பதி­லாக எட்டு அணிகள் பங்­கு­பெறும் போட்­டியை 16 அணி­க­ளாக உயர்த்தி இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தை நடத்த முடிவு செய்யப் பட்­டுள்­ளது என ஐ சி சி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க