உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சீனன் குடாவில் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

திருகோணமலை சீனன் குடா காவல் பிரிவிற்கு உட்பட்ட நாலந்தபுர பிரதேசத்தில் விமானப்படை தளத்திற்கு அருகில் பாவனையற்ற வீடென்றில் இருந்து தோட்டாக்கள் வெற்றுத்தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக சீனன் குடா காவல்துறையினர்
தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலை அடுத்து அவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது கைவிடப்பட்ட வீட்டுக்கு வெளியேயும் வீட்டிற்கு உள்ளேயும் இப்பொருட்களை மீட்டுள்ளனர்.

கண்டு பிடிக்கப்பட்டவைகளில் பாவிக்காத தோட்டாக்கள் டி.56-இரண்டும்,n.t.n.g- மூன்றும்,வெற்றுத்தோட்டாக்கள் டி.56-108,g.p.n.g-11,n.t.n.g-4,டி.56.2.13-3. ஆக மொத்தமாக தோட்டாக்கள் 5,வெற்றுத்தோட்டாக்கள் 131ஆக கண்டுடுபிடிக்கப்பட்டதாக சீனன் குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க