உள்நாட்டு செய்திகள்புதியவை

மொனராகலையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, எழுவர் காயம்

மொனராகலை உள்ள மரகல மலை பகுதியில் வாகனம் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், தம்பகல மற்றும் லுனுகம்வேர பகுதிகளில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மொனராகலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த பெண் தம்பகலவில் வசிக்கும் 54 வயதுடையவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இவரது பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொனராகலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க