வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் சீக்கியர் கொலை: விசாரணைகள் தீவிரம்

அமெரிக்காவில் சீக்கியர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் . இது இனவெறி தாக்குதலா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள ட்ரேசி நகரில் வசித்து வந்தவர் பர்ம்ஜித் சிங் (வயது 64) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

“கொலை சம்பவம் நடந்த அதே நேரத்தில், ஒரு நபர் பூங்காவின் வேலியை தாண்டி குதிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கின்றன. அதனை அடிப்படையாக கொண்டு கொலையாளியை தீவிரமாக தேடி வருகிறோம்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை கொலையாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு 1000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம்) சன்மானம் அளிக்கப்படும் எனவும் சீக்கிய அமைப்பு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க