உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யுத்தத்தினால் சேதமடைந்த ஆலயங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

மோதல்களினால் சேதமடைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையாகவும் பகுதியளவில் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைக்க நடவடிக்கை

30 வருட கால யுத்த மோதல் காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து ஆலயங்களை புனரமைப்பதில் கூடுதலான சந்தர்ப்பங்கள் வடக்கு மாகாண மத பிரபுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபாவை விசேட ஒதுக்கீடுடன் இந்து மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை பெற்று மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க