உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய தேசிய முன்னணியினரின் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவு!

ஐக்கிய தேசிய முன்னணி (யு.என்.எஃப்) கட்சித் தலைவர்கள் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாட்டை எட்ட முடியாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) தலைவர் ரனில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

இந்நிலையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இந்த மாத இறுதிக்குள் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், . ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர், இதன் பி[பின்னரே கூட்டணி உறுப்பினர்கள் வேட்பாளரை ஆதரிப்பார்களா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க