உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு போராட்டம் நாளையும் தொடரும் என்று எச்சரிக்கை

மட்டக்களப்பு கல்வியங்காடு பகுதி இந்து மயானத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவரின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமையை எதிர்த்து இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காவல்துறையினரால் இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டதாக மட்டக்களப்பு கல்வியங்காடு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் அவர்கள் இன்று பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொண்டனர்.

இதனால் அந்த பகுதியில் வாகனப்போக்குவரவில் நெரிசல் நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் இன்று மாலையளவில் ஆர்ப்பாட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டபோதும் நாளை அது தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க