உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டுக்காக ஒன்றிணைவோம் – வலிகாமம் பிரதேசத்தில்!

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற நாடு தழுவிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் தொடர் வேலைத்திட்டத்தின் 5 ஆவது நாள் இன்றாகும்.

ஜனாதிபதி செயலகத்தின் மூலம் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொது மக்களுக்காக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வலிகாமம், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக நடமாடும் சேவை வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் போது தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் போன்ற சேவைகள் இடம்பெற்றன. இதில் நன்மை அடைந்த பொது மக்கள் இந்த சேவையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க