உள்நாட்டு செய்திகள்புதியவை

சிறுவர் இல்லத்தின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தல்

சிறுவர் இல்லங்களில் வாழும் சிறுவர்களை அருகிலுள்ள தேசிய பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் அண்மையில் வெளியிடப்பட்ட அதன் சுற்றறிக்கைகளில் ஒன்றின் படி இந்த குழந்தைகளுக்கான பாதுகாவலராக பராமரிப்பாளர் கருதப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கஅனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் சிறுவர்களை ஏற்குமாறு ல்வி அமைச்சர் அகிலா விராஜ் கரியவாசம் ஜூலை 31 அன்று 38/2019 குறியீட்டு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க