உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சஜித்திற்காக தேங்காய் உடைத்து பிரார்த்தனை

திருகோணமலை இன்று ஜக்கிய தேசயக்கட்சி ஆதரவாளர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரி தேங்காய் உடைத்து பிராத்தித்தார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் நிமித்தமாக கட்சியினும் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் குறித்த பிரார்த்தனை இடம்பெற்றிருந்தது.

திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தானத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து பிராத்தித்தார்கள்.

இப்பிராத்தனையில் நூற்றுக்கு அதிகமான ஜக்கிய தேசியக்கட்சி ஆதவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க