உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போதை மாத்திரை மற்றும் கேரளா கஞ்சாவுடன் 21 வயது இளைஞன் கைது

திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்சார நிலைய வீதியில் கேரளா கஞ்சா 110 கிராம் மற்றும் போதைமாத்திரைகள் 101 உடன் 21 வயது நபரை போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதை பொருள்பாவிப்பவர் என்றும் வியாபாரமும் செய்பவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைபொருட்களையும் தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்தாதாகவும் விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க