உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகர், சுரேன் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் (Mr.David Mckinnon) அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று (26) முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதுபோருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்,  கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian integrated conflict  Analysis Processஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களான Ms. Sharmala Naidoo  மற்றும் Mr. Vikramveer Suagh  ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க