சினிமா

பிரகாஷ்ராஜுக்கு நீதிமன்ற உத்தரவு!

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் தான் இயக்கி நடித்த உன் ‘சமையல்அறையில்’  என்ற படத்தை ஹிந்தியில் தட்கா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ள இப்படத்தில் டாப்சி, ஸ்ரேயா, நானா படேகர், அலிபாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆனால் தற்போது அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது  நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதாவது 2016ல் எஸ்சல் விஷன் என்ற ஜீ குரூப் நிறுவனத்திடம் வாங்கிய 5.88 கோடி பணத்தை பிரகாஷ்ராஜ் திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து ஜூலை 15ம் திகதிக்குள் அந்நிறுவனத்திடம் வாங்கிய தொகையை பிரகாஷ்ராஜ் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்,  அந்நிறுவனத்திற்கு பிரகாஷ்ராஜ் முதல்தவணையாக வழங்கிய 2 கோடி ரூபாய்க்கான காசோலை பவுன்ஸ் ஆனதால் தற்போது அது நீதிமன்ற அவமதிப்பாகியிருக்கிறது. அதனால் அவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்யுமாறு எஸ்சல் விஷன் நிறுவனத்திடம் பிரகாஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க