உள்நாட்டு செய்திகள்புதியவை

நிட்டம்புவ பகுதி கட்டிடமொன்றில் தீபரவல்

கம்பஹா மாவட்ட நிட்டம்புவ பகுதியில் கட்டமொன்றில் ஏற்பட்ட பாரிய தீபரவலில் கட்டடத்தின் 2வது மாடி முழுதாக சேதமடைந்துள்ளதாக நிட்டம்புவ காவல் அதிகாரி தெரிவித்தார்.

நிட்டம்புவ -திஹாரி ஜுனைட் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் மேல் மாடியில் அமையப்பெற்றுள்ள மாணவ விடுயிலேயே இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீபரவல் ஏற்பட்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்டுள்ளனர்.

திடீர் தீபரவலையடுத்து விடுதியிலிருந்த அனைத்து மாணவர்களையும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன் போது குறித்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் காவல்துறை கம்பஹா தீயணைப்பு படையினரையும் , பிரதேச வாசிகளையும் இணைத்துக் கொண்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கருத்து தெரிவிக்க