உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சில அமைச்சின் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட வெளிநாடு சென்றிருப்பதால் கோப் குழுவில் ஆஜராகவில்லை.

அவருக்காக அமைச்சின் பதில் செயலாளர் இந்திராணி விதானகே கோப் குழுவில் முன்னிலையானார்.

எவ்வாறாயினும், விசாரணையின் பொருட்டு சுரேன் பட்டகொட முன்னிலையாவது அவசியமெனவும், அவரும் அவரது செயலாளரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி மீண்டும் கோப் குழுவில் முன்னிலையாக வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க