உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நிர்மாணத்துறையின் அபிவிருத்திக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்க தயார் – ஜனாதிபதி

நிர்மாணத்துறையின் அபிவிருத்திக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

துறைசார் அபிவிருத்திக்கு தேவையான வசதிகள் வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கன்ஸ்ட்ரக்ட் – 2019 நிர்மாணத்துறை கண்காட்சியை திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் அமைக்கப்படும் எந்தவொரு கட்டடமும் சூழலுக்கும் நாட்டின் கலாசாரத்திற்கும், அடையாளத்திற்கும் இசைவானதாக அமையவேண்டும்.

நீர் முகாமைத்துவம், பசுமை நவீனத்துவம் மற்றும் கலாசார அனுகூலங்கள் தொடர்பிலும் கட்டட நிர்மாணத்தின் போது கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க