உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘சஜித்தின் பெயரை ரணில் அடுத்தவாரம் முன்மொழிவார்!’

” ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார். ராஜபக்சக்களை தோற்கடிக்ககூடிய வேட்பாளர் அவரே. ” – என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குமாறுகோரி மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறும் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவு இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்படும்.

அன்புக்குரிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவார். அதனை சபாநாயகர் கருஜயசூரிய வழிமொழிவார்.

” ராஜபக்சக்களின் போலி பிரசாரங்களுக்கு ஏமாறவேண்டாம். கடந்த நான்காண்டுகளில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொருட்கள், சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சஜித்துக்காக திறைசேரியூடாக நிதி ஒதுக்கீடு செய்யும்போது அஞ்சவேண்டியதில்லை. அவர் களவாடமாட்டார். மக்களுக்கு உரிய வகையில் சேவைகள் சென்றடையும்.” என்றும் மங்கள கூறினார்.

கருத்து தெரிவிக்க