உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சம்பந்தன் – கோட்டாபய விரைவில் பேச்சு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் விரைவில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தனித்தனியே பேச்சுகளை நடத்தவுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே கோட்டாவுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சஜித் பிரேமதாசவுடன் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சந்திப்பின்போதும் மேற்படி தகவலை சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, நாடாளுமன்றக்குழு ஆகியனவும் கூடி ஆராயவுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே மேற்படி பேச்சுகள் ஆரம்பமாகும் என தெரியவருகின்றது.

 

 

 

கருத்து தெரிவிக்க