உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று மீண்டும் பதவியேற்கும் 2 முஸ்லீம் அமைச்சர்கள்

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தாங்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

இன்று பைசல் காசிம் மற்றும் அலி சாஹீர் மௌலானா ஆகியோர் தங்களது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க