உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று மருத்துவர்களின் பனி புறக்கணிப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இவ்வாறு வேலைநிறுத்தம் இடம்பெற மாட்டாது என வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க