உள்நாட்டு செய்திகள்புதியவை

‘வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா।சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் உயர் இராஜதந்திரியான யசூசி அகாஷியை நேற்று சந்தித்து கலந்துரையாடியா போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பாரியளவில் பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க