உள்நாட்டு செய்திகள்புதியவை

களுத்துறை பிரதேசத்தில் 3 வாரங்களுக்கு நீர் வெட்டு

களுத்துறை பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 3 வாரங்களுக்கு நீர் விநியோகத்தை தடை மற்றும் குறைந்த அழுத்தத்துடன் நீரை விநியோகிக்கும் நிலை உருவாகியுள்ளது என தேசிய நீர்வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வஸ்கடுவ, கட்டுகுருந்த, நாகொடை, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, பேருவல, மக்கொன, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தோட்டை போன்ற பிரதேசங்களுக்கான நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் அளுத்கம, மதுகம, மற்றும் அகலவத்த புதிய நீர் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தினால்நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

கருத்து தெரிவிக்க