உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்த 4 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்।

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது।

25 வயது முதல் 35 வயதுக்கு இடைபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்।

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய படகையும் யாழ் பதில் கடற்றொழிலாளர் பணிப்பாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது।

கருத்து தெரிவிக்க