உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 06.00 மணிமுதல், இன்று காலை 06.00 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் வேலைத்திட்டம் கடந்த ஜுலை மாதம் 5ம் திகதி ஆரம்பமானது.

அன்று முதல், இன்று வரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 9 ஆயிரத்து 692 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க