உள்நாட்டு செய்திகள்புதியவை

பெரஹரவினால் பொரலெஸ்கமுவ வீதிகள் மூடப்படுகின்றன

நாளை (ஆக. 21) முதல் நடைபெறவிருக்கும் பெல்லன்வில எசல பெரஹர காரணமாக பொரலெஸ்கமுவ வீதிகள் மூடப்பட உள்ளன.

அதன்படி, மஹரகமைக்கும் தெஹிவளைக்கும் இடையிலான பஸ் பாதை எண் 119 உடன் பெல்லத்தர சந்தி வரை பொரலெஸ்கமுவ வீதி நாளை பிற்பகல் 2 மணி முதல் ஆகஸ்ட் 23 அதிகாலை 1:30 மணி வரை மூடப்பட உள்ளன.

மேலும், ஆகஸ்ட் 23 ம் தேதி மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை பொரலெஸ்கமுவ சந்தி, பெல்லந்தரா சந்தி, பெப்பிலியானா மாவத ஆகியவற்றுக்கு இடையேயான வீதிகள் மூடப்பட உள்ளன.

இந்த காலகட்டத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க