உள்நாட்டு செய்திகள்புதியவை

தம்புள்ளையில் ஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது

தம்புள்ளை பகுதியில் ஹெரோயினுடன் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 20 – 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 800 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறை முன்னெடுத்து வருகின்றது.

கருத்து தெரிவிக்க