உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பறிப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் அவரிடம் இருந்த பணத்தினை பறித்துக் கொண்டு உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிப்படைந்த அமெரிக்க பிரஜை கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க