உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் பேரணியை தடுக்க அலரிமாளிகையில் விருந்து!

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் மங்கள சமரவீர  தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி, மாத்தறையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்றலை குறைக்கும் விதமாக, பிரதமர் அலுவலகத்தினால் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி அரசாங்கத்தின் 04 ஆண்டுகள் நிறைவையொட்டி, அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விருந்துபசாரத்துக்கு, தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கலந்துகொள்ளுமாறு, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க