உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தெரிவு குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதம் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளைய தினம் கூடவுள்ளது. இதன்போது 3 பேர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

நாளை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றமும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க