உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சிறி சபாரத்தினம் அறக்கட்டளையின் கீழ் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

வவுனியா கள்ளிகுளம் கருங்காலிக்குளம் பாடசாலைக்கு சிறிசபாரத்தினம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நூலகம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

போரால் பல பாதிப்புகளை சந்தித்து மீள்குடியேறியுள்ள குறித்த பகுதியில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்கும் நோக்குடன் 3 இலட்சம் ரூபாய் செலவில் குறித்த நூலகம் அமைக்கபடவுள்ளதாக சிறிசபாரத்தினம் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அறக்கட்டளையின் சர்வதேச இணைப்பாளர் எ. நித்தியானந்தன், இலங்கைக்கான தலைவர் கென்றி மகேந்திரன், ஆலோசகர் சபாநாதன், மாணவர்கள் ஆ சிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க