உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்!

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாக பதவி வகித்த லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதி நியமனத்தில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையிலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சவேந்திர சில்வாவுக்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வாவுக்கு எதிராக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க