உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

காணாமல் போயிருந்த நபரின் எச்சங்கள் தேயிலை தோட்டத்திலிருந்து மீட்பு

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்த நபர் ஒருவரின் எச்சங்கள் பொகவந்தலாவை செபலட்ன் தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.

கொடியாகல பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித எச்சங்கள் கிடக்கும் பகுதியில் டிசேட் ஒன்றும் நீட்டகாட்சட்டையும் இனங்கானபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் கைபேசியினை வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காணாமல் போயிருந்த நபரின் கைபேசியினை கைவசம் வைத்திருந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கைபேசி ஒருநாள் தான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது கிடைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க