உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

97ஆவது தேசிய மெய்­வல்­லு­நரில் தங்கம் வென்றார் சண்­மு­கேஸ்­வரன்

97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் அட்­டனைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன் முத­லிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீ­க­ரித்தார்.

ஆண்­க­ளுக்­கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கேற்ற இரா­ணு­வத்தைச் சேர்ந்த குமார் சண்­மு­கேஸ்­வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முத­லிடம் பிடித்தார். இதன்மூலம் நேபா­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்கு தகு­தி­ பெற்றுள்ளார்.

இப்­போட்­டியில் இரண்டாம் இடத்தை எம்.யூ. குமா­ரவும் மூன்றாம் இடத்தை குமார பண்டாரவும் பெற்றுக் கொண்டனர்.

கருத்து தெரிவிக்க