உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

17,500 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயறு உற்பத்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இம்முறை 17,500 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயறு உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இயற்கை உரத்தை பயன்படுத்தி இம்முறை உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

கால்நடைகளினால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பான வேலி அமைப்பதற்கு விவசாயத் திணைக்களம் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கியுள்ளது.

ஆறாயிரம் மெற்றிக் தொன் பாசிப்பயறு அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தகிரிய, வீரவில, அம்பலாந்தொட்ட உள்ளிட்ட பல பிரதேசங்களில் விதை வளர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க