உள்நாட்டு செய்திகள்புதியவை

‘வேட்பாளர் அறிவிப்பின் பின்னரே ஆதரவு தீர்மானம் பகிரப்படும்’

அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரேயே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்துப் தெரிவிக்க முடியும்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரினதும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கட்சிக்குள் ஆராய வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் தொடர்பில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணி இன்றைய தினம் தமது வேட்பாளரை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க